ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் படங்களை இயக்கியவர் சரண். இடையில் ஜெமினி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன் வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இதய திருடன், வட்டாரம், மோதி விளையாடு, அசல் படங்களின் தோல்வியால் அடுத்த வாய்ப்பின்றி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார்.
இதில் வினய்யுடன் சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா என்ற இரு புதுமுகங்கள் நடித்தனர். பரத்வாஜ் இசை அமைத்திருந்தார், கிருஷ்ணராமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மிகுந்த பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் இந்தப் படத்தை சிரமப்பட்டு முடித்தார் சரண். படம் முடிந்தும் அதனை வெளியிட முடியாமல் தவித்து வந்தார்.
இந்தப் படத்தின் நாயகன் வினய் வில்லனாக நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும், அதில் வினய்யின் நடிப்பு பேசப்படுவதாலும் இந்த சூழ்நிலையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண். வருகிற 22ந் தேதி படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.