ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
எழுத்தாளர் மீரா கதிரவன், அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விழித்திரு என்ற படத்தை இயக்கி, நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரிக்கவும் செய்தார். இதில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரவு, தன்ஷிகா, எரிக்கா பெர்ணாண்டஸ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ஒரு வருடத்திற்கு முன்பே நிறைவடைந்து விட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. தற்போது வருகிற அக்டோபர் மாதம் 6ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறியிருப்பதாவது:
இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள சவுந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் மீரா கதிரவன்.