ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் பற்றிய பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. காற்று வெளியிடை தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் இயக்க இருக்கிறார் மணிரத்னம். ஏற்கெனவே அவர் தயார் செய்து வைத்திருந்த ஸ்கிரிப்ட்டைத்தான் இப்போது படமாக இயக்க இருக்கிறார். இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17ஆவது தயாரிப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மணிரத்னம் இயக்குகிறார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.