ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து மனிதராக நடித்துள்ள அப்பா விஜய்க்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர் டாக்டர், இன்னொருவர் மேஜிக்மேன்.
இதில் மேஜிக்மேன் விஜய்க்கு அதிரடியான வேடமாம். அதாவது அவர் ஐந்து பேர்களை கடத்திச்சென்று கொலை செய்கிறாராம். அவர்களில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவராம். ஆனால், அந்த ஐந்து பேரையும் டாக்டர் விஜய் கொலை செய்ததாக அவர் மேல் பழி விழுந்து விடுமாம். இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் மெர்சல்.
கதைப்படி, மேஜிக்மேன் கெட்டவராக தெரிந்தாலும் அவர் செய்யும் கொலைகள் அனைத்தும் நல்ல நோக்கத்தில் தான் செய்யப்படுமாம். அந்த வகையில் மெர்சல் படத்தில் டாக்டர் விஜய் நல்லவராகவும், மேஜிக்மேன் விஜய் கெட்டவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். அவர் எதற்காக அந்த கொலைகளை செய்கிறார் என்பது தான் படத்தின் சஸ்பென்ஸ் என மெர்சல் பட வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.