காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து மனிதராக நடித்துள்ள அப்பா விஜய்க்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர் டாக்டர், இன்னொருவர் மேஜிக்மேன்.
இதில் மேஜிக்மேன் விஜய்க்கு அதிரடியான வேடமாம். அதாவது அவர் ஐந்து பேர்களை கடத்திச்சென்று கொலை செய்கிறாராம். அவர்களில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவராம். ஆனால், அந்த ஐந்து பேரையும் டாக்டர் விஜய் கொலை செய்ததாக அவர் மேல் பழி விழுந்து விடுமாம். இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் மெர்சல்.
கதைப்படி, மேஜிக்மேன் கெட்டவராக தெரிந்தாலும் அவர் செய்யும் கொலைகள் அனைத்தும் நல்ல நோக்கத்தில் தான் செய்யப்படுமாம். அந்த வகையில் மெர்சல் படத்தில் டாக்டர் விஜய் நல்லவராகவும், மேஜிக்மேன் விஜய் கெட்டவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். அவர் எதற்காக அந்த கொலைகளை செய்கிறார் என்பது தான் படத்தின் சஸ்பென்ஸ் என மெர்சல் பட வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.