ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் குயினாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். ரங்கூன் படத்தின் தோல்விக்கு பிறகு சிம்ரன் படம் வெற்றி பெற வேண்டும் என்று களமிறங்கி உள்ளார். சிம்ரன் பட புரொமோஷனில் இருந்த கங்கனா, இப்படம் பற்றியும், தனது வாழ்க்கை குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதை இங்கு பார்ப்போம்...
சிம்ரன் படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?
சிம்ரன் படத்தில் சிம்ரன் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். சுதந்திரமாக வாழ வேண்டும், யாரும் தன்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட கூடாது என்று நினைப்பவர் சிம்ரன். இப்படத்தில் உள்ள கேரக்டரும், நிஜ வாழ்க்கையில் என்னுடைய கேரக்டரும் ஒன்று தான்.
சிம்ரன் படத்தில் நீங்கள் திருடுகிறீர்கள், நிஜ வாழ்க்கையில் அப்படி செய்தது உண்டு?
சின்ன வயதில் திருடி இருக்கிறேன். என்னுடைய தாத்தாவிடம் நான் காசு கேட்கும்போது அவர் தனது பர்ஸில் ரூ.10 எடுத்து கொள்ள சொல்வார். நான் ரூ.10க்கு பதிலாக ரூ.50 எடுத்து விடுவேன். சில சமயம் ரூ.100 கூட திருடியிருக்கிறேன்.
சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் பற்றியும், சினிமாவில் நடக்கும் அவலங்கள் பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்தீர்கள். இதனால், திரையுலகில் உங்களுக்கு நிறைய எதிரிகள் வளர்ந்துள்ளார்களா...?
எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் நான் செய்வேன், பேசுவேன். இந்த 11 ஆண்டுகளில் நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு இப்போது சாதித்துள்ளேன். சிம்ரன் படம் தோல்வியடைந்தால் கூட அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் அதுப்பற்றி கவலைப்பட மாட்டேன். எனக்கென்று சொந்தமாக மணாலியில் வீடு கட்டியிருக்கிறேன், அதில் நிம்மதியாக சென்று அமர்ந்து கொள்வேன். என் எதிர்கால சினிமா பற்றி கவலையில்லை.
இரண்டுமுறை காதல் வயப்பட்டு அது தோல்வியில் முடிந்தது ஏன்?
ஒருவரின் வாழ்க்கை சரியாக அமையாவிட்டால் அதற்கு அந்த பெண் தான் காரணம் என்று கூறுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எல்லா நேரமும் பெண்ணையே குற்றம் சொல்ல முடியாது. இந்த சமூகமும் பெண்கள் தான் தவறு செய்கிறார்கள் என்று எண்ணுகிறது, அந்த நிலை மாற வேண்டும். அதேப்போன்று திருமணம் செய்யாமல் ஒரு பெண் தன் வேலையில் வெற்றியாளராக வலம் வந்தால் கூட அவரை வெற்றியாளராக இந்த சமூகம் பார்க்காது. முடிந்தால் இந்த எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும். இந்த சமூகம் தான்...
உங்களின் முந்தைய சிம்ரன் படம் சரியாக போகவில்லை, இதனால் உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருக்கிறதா...?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரங்கூன் வெளியான சமயத்தில் சற்று பயந்தேன். ஆனால் படம் தோல்விக்கு பின்னர் அந்த பயம் போய்விட்டது. இந்தப்படம் சரியாக போகவில்லை, இந்தப்படம் ரூ.100 கோடியில் இணையவில்லை என்று எல்லாம் நான் பார்ப்பது கிடையாது. சினிமாவை விரும்பி செய்கிறேன். அது வெற்றி பெறுவது, பெறாதது என் கையில் இல்லை, ஆகையால் அதுப்பற்றிய கவலையும் என்னுள் இல்லை.
எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம் எதுவும் உண்டா?
நிச்சயம் கிடையாது. எனக்கு பிடித்தமான விஷயம் பேஷன். ஆனால் அரசியல்வாதிகளின் உடை அப்படியிருக்காது. என்னால் நன்றாக பேசமுடியும், ஒரு நல்ல தலைவராக இருக்க முடியும். ஆனால் அரசியல்வாதிகள் அணியும் உடை, அவர்களின் லைப் ஸ்டைல் எனக்கு செட்டாகாது.