ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் தரணியால் 'தில்' படத்தில் என்கவுன்டர் சங்கராக அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. 2000-ஆம் வருட ஆரம்பத்தில் இருந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக வலம் வந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான என்னை அறிந்தால், அநேகன் ஆகிய படங்களில் தலைகாட்டியதோடு சரி, அதன்பின் ஆளையே காணோம். விசாரித்து பார்த்ததில் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என மொழிக்கு ஒன்றாக சில படங்களில் நடித்துவரும் இவர் புதிதாக 'ஆவிட் மைனர்ஸ்' என்கிற நிகழ்ச்சியை நடத்த தயாராகி வருகிறார்.
“நான் என்னை எப்போதுமே பிரபலம் என நினைத்துக் கொண்டதில்லை. நான் ஒரு நடிகன். அந்த பெருமை மட்டுமே எனக்கு சொந்தம். படங்கள் இல்லாத நேரத்தில் சாலையில் இறங்கி மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடன் உரையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான வேலை. அதைத்தான் தற்போது செய்து வருகிறேன். இவர்களிடமிருந்து பெற்ற அனுபவங்களை கொண்டுதான் இந்த 'ஆவிட் மைனர்ஸ்' என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளேன். இதன் நோக்கம் அனுபவங்களை பகிர்வதும் நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும் தான். இதில் கலந்து கொள்பவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் தான்” என தனது புதிய களம் பற்றி விவரிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி.