ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பில்லா பாண்டி படப்பிடிப்பில் ஆரம்பமான பெப்சி - தயாரிப்பாளர்கள் சங்கம் இடையேயான பிரச்னை, மெல்ல மெல் பெரிதாகி, தயாரிப்பாளர்கள் சங்கம் தனியாக புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும், பெப்சி அல்லாத தொழிலாளர்களுடன் பணியாற்றும் முடிவு என்ற அளவுக்கு சென்றது. இதனால் கோபாமான பெப்சி கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. தற்போது அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நேற்று இரவு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, கடந்த 3 மாதமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே இருந்த பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளதோடு, இன்று முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய காரணமாக இருந்த பெப்சி சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி என்றார்.
மேலும் பெப்சியிலிருந்து விலக்கப்பட்ட டெக்னீஷியன்கள் யூனியன் சங்கம் தனித்தே செயல்பட விரும்புகிறது. அதனால் பெப்சியிலிருந்து அந்த சங்கம் முழுமையாக விலகிவிட்டது என்றார் செல்வமணி.
பெப்சி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகின.