ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஜோதிகா. அதையடுத்து விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தார். அப்படி அவர் நடித்த முதல் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானதால் தமிழில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் ஜோதிகா. தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக நடித்து வந்த போதும் இதுவரை எந்த படத்திலும் அவர் டப்பிங் பேசியதில்லை.
ஆனால் முதன்முறையாக தற்போது மகளிர் மட்டும் படத்தில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் ஜோதிகா. மேலும், ஜோதிகா மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் இன்னும் அவர் சரளமாக தமிழ் பேசமாட்டார். அதனால் அவருக்கான டயலாக்குகளை பயிற்சி கொடுத்து பேச வைத்திருக்கிறார் டைரக்டர் பிரம்மா. அந்த வகையில், இந்த மகளிர் மட்டும் படத்தில் தனக்கான வசனங்களை பேச 12 நாட்கள் எடுத்துக்கொண்டாராம் ஜோதிகா.