ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விவேகம் படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் எதிர்பாராத தோல்வி அஜித்தின் ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதைவிட மற்றுமொரு அதிர்ச்சியாக அஜித்துக்கு நடந்த ஆபரேஷன் அமைந்துவிட்டது.
விவேகம் படத்திற்காக உடம்பை கடுமையாக ஏற்றி சண்டைக் காட்சிகளில் நடித்து முடித்ததால் அஜித்தின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான அறுவை சிகிச்சை கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. அதனால், அஜித் குறைந்தது 3 மாதம் வரையிலாவது ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அஜித்தின் அடுத்த படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டுதான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
விவேகம் பட வெளியீட்டிற்கு முன்பே அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாதான் இயக்கப் போகிறார் என செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அந்த முடிவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்பது தெரியவில்லை. படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அஜித், சிவா இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது கூட அஜித், சிவாவிடம் அடுத்த கதையைத் தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளதாகச் சொன்னார்கள்.
அஜித் 3 மாதம் ஓய்வெடுத்தாலும், அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி ஐம்பது நாட்கள் கழித்த பின் பார்த்துதான் அடுத்த படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்கிறார்கள். இப்படித்தான் வேதாளம் படம் வெளிவந்ததும் அஜித் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போது விவேகம் படம் முடிந்ததும் தோளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
ஆரம்பம் படம் வெளிவந்த போதும் கூட முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அஜித்திற்கு தொடர் அறுவை சிகிச்சைகள் நடந்தாலும் அவர் நடிக்க வந்துவிட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடித்துக் கொடுப்பார் என்பது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தெரியும்.