ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'காற்றுவெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி விட்டார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகளின் தேர்வில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம். அது பற்றி மணிரத்னம் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மணிரத்னத்தின் அடுத்தப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில், மணிரத்னம் லேட்டஸ்டாக சிம்புவையும் தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரவிந்த்சாமி, ஃபஹத் ஃபாசில் இருவரும் மணிரத்னத்தின் பரிசீலனையில் இருந்து வரும் நிலையில் இப்போது சிம்புவும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. காற்று வெளியிடை கதையை தேர்வு செய்வதற்கு முன் கார்த்தியை வைத்து இயக்க மணிரத்னம் எழுதி, பின்னர் வேண்டாம் என கைவிடப்பட்ட கதையைத்தான் இப்போது சின்ன மாற்றத்துடன் இப்போது படமாக்க இருக்கிறார் மணித்னம்.
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பது உறுதியானால்... ஜோதிகாவுடன் சிம்பு நடிக்கும் மூன்றாவது படம் இது. ஏற்கெனவே 'சரவணா', 'மன்மதன்' ஆகிய படங்களில் சிம்பும், ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ளனர். இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் என கூட்டணி அமைத்து மணிரத்னம் இயக்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.