ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாவீரன் கிட்டு படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு அறம் செய்து பழகு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வந்தார் சுசீந்திரன். இதில், அறம் செய்து பழகு படத்தின் தலைப்பை நெஞ்சில் துணிவிருந்தால் என்று மாற்றிய சுசீந்திரன், தீபாவளிக்கு அந்த படம் வெளியாகயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பெயரே வைக்காமல் புதுமுகங்களை வைத்து அவர் இயக்கி வந்த படத்திற்கு சமீபத்தில் ஏஞ்சலினா என்று டைட்டீல் அறிவித்தார். மாவீரன் கிட்டு படத்தில் சூரியை சரியாக பயன்படுத்தாத சுசீந்திரன், இந்த படத்தில் அதற்கும் சேர்த்து அவருக்கு ஒரு வெயிட்டான வேடம் கொடுத்திருக்கிறாராம். இந்த படத்தின் ஏஞ்சலினா என்ற டைட்டீலுக்கு கீழே, ரெட் ரோஸ் என்றொரு சப் டைட்டீல் வைத்திருக்கிறார் சுசீந்திரன். பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படம் பாணியில் இந்த படத்தின் கதை அமைந்திருப்பதுதான் இதற்கு காரணம் என்று திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.