மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா மையத்தின் சார்பில் நதிகளை மீட்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சாரம் அக்டோபர் 2ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரமாண்ட விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் சென்னையில் நேற்ற நடந்தது.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக விழாவை ரஜினி வாழ்த்திய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது. நதிகள், பூமியின் ரத்த நாளங்கள். அவற்றை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதியாக்க வேண்டும். இதற்கு மாபெரும் முயற்சி மேற்கொண்டிருக்கும் சத்குருவுக்கு துணையிருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.