ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடினார். இதையட்டி அவரை வானளாவ புகழ்ந்து விஷால் ஆன்தம் என்ற பாடலை தலைவன் வருகிறான் என்ற தலைப்பில் இசை அமைப்பாளர் இஷான் தேவ் வெளியிட்டிருந்தனர்.
“நேசம் கொண்ட தலைவன் வந்தான்,
நெஞ்சே நிமிர்ந்து நில்லு,
நெருப்பைப் போல தீமை எரிக்கும்
நேர்மை இவன்தான் சொல்லு
வீரம் பாதி ஈரம் பாதி
வெல்லும் எங்கள் விஷால் நீதிஞ்”
என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கியிருந்தார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி இருந்தார். நிகில் மேத்யூ, இஷான் தேவ் பாடி இருந்தனர். ஆனந்த், குணா, கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.
இந்த ஆன்தம் பாடலை கேட்ட விஷால் அதை உருவாக்கியவர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினார். அவர்களிடம் பேசிய விஷால் “நல்லாருந்துச்சு. ஆனா கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. நான் திரையுலகுக்கு ஆற்றி வரும் பணிகள் இதே உற்சாகத்தோடு தொடரும். இனி நான் எப்போதெல்லாம் இலேசாக சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் இந்த பாடல் என்னை உற்சாகப்படுத்தி பணிபுரிய வைக்கும். இசையமைப்பாளர் இஷான் அருமையான பாடலை எனக்காக உருவாக்கியுள்ளார். அவருக்கும் இதைச்செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி”. என்றார்.