ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் முறையாக உண்மையிலேயே சிறப்பு விருந்தினர்கள் நுழைய இருக்கிறார்கள். இந்த வாரம் முழுவதுமே பிக் பாஸ் வீட்டிற்குள் சில ஆச்சரியமான நுழைவுகள் நடந்து வருகின்றன. சினேகனின் அப்பா, பிந்துவின் நண்பர்கள், ஹரிஷின் பெற்றோர், சுஜாவின் அம்மா, அக்கா, வையாபுரியின் குடும்பத்தினர், ஆரவ்வின் அண்ணன், நண்பர், கணேஷின் மனைவி என பாச மழையில் நனைத்துவிட்டார்கள்.
இன்று மேலும் ஒரு சிறப்பு நுழைவு வீட்டில் நடைபெறுகிறது. கதாநாயகன் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், நாயகி கேத்தரின் தெரேசா இன்று வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பமான 70 நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தின் பிரமோஷனை விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் நடத்துகிறது. பொதுவாக விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்படி பல பிரபலங்கள் அடிக்க வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம்தான். ஆனால், அது பிக் பாஸ் வீட்டில் மிகவும் தாமதமாக நடக்கிறது.
கதாநாயகன் படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது. படத்தை பிரமோஷன் செய்வதற்காகத்தான் விஷ்ணு, கேத்தரின் இருவரும் இன்றைய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இனி வரும் வாரங்களில் இது போல மேலும் சில விருந்தினர்களை எதிர்பார்க்கலாம். இன்னும் 25 நாட்களே இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.