ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்தவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகுமார். அவருடைய மூத்த மகன் சூர்யா, 1997ம் ஆண்டு வெளிவந்த 'நேருக்கு நேர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமகமானார்.
சினிமாவிற்கு அவர் வந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. அன்றிலிருந்து இன்று வரை அவ்வப்போது கொஞ்சம் தடுமாறினாலும் தமிழ்த் திரையுலகில் சூர்யாவுக்கென 'தானா சேர்ந்த கூட்டம்' நிறையவே இருக்கிறது. சூர்யா 20 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு சூர்யா நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், எனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பது தான். உங்களின் கைத்தட்டல் உத்வேகத்தையும், பாராட்டுகள் எனது தரத்தை உயர்த்தவும் உதவின. நீங்கள் தவறு என்று சுட்டிக்காட்டிய விஷயங்கள் என்னை இன்னும் கற்க உதவின. ஆதரவு, சினிமாவையும் தாண்டி அகரம் அறக்கட்டளை அமைக்க வைக்க உதவியது. இவை எல்லாவற்றையும் விட உங்களது அன்பு எனது இன்ஜினை வேகமாக இயக்க முக்கிய காரணமாக அமைந்தது. என்னுடைய இந்த 20 ஆண்டு பயணத்தில் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் நான் பல மைல்கள் கடந்து பயணிக்க வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.