கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ஜி.வி.பிரகாஷ் இப்போதெல்லாம் அடிக்கடி மக்கள் சேவை என்று கிளம்பி விடுகிறார். திடீரென கிராமத்துக்கு விசிட் அடிப்பது, குழந்தைகளை கொஞ்சுவது, முதியவர்களை கட்டிப்பிடிப்பது என்று மக்களுக்கு நெருக்கமாகிறார். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டுக்கு சென்ற முதல் நட்சத்திரம் அவர் தான்.
விழுப்புரம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார். அதனை நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும் என்று கிராமத்து மக்கள் வற்புறுத்தவே தைலாபுரத்துக்கு கிளம்பி போனார் ஜிவிபி. நிகழ்ச்சி நடந்த அன்று அந்த ஊர் கிராமத்து மக்களின் அன்பில் நெகிழ்ந்தே போய்விட்டார் ஜிவி. தைலாபுரத்து மக்களே விருந்து கொடுக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஒருவர் வலுகட்டாயமாக அழைத்து செல்ல, அவரின் இல்லத்திற்கு சென்று தரையில் அமர்ந்து சாப்பிட்டார். மதிய உணவை முடித்துக் கொண்டு கிராமத்தின் அருகில் இன்னொரு அரசு பள்ளிக்கு சென்று, குழந்தைகள் ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.