ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜி.வி.பிரகாஷ் இப்போதெல்லாம் அடிக்கடி மக்கள் சேவை என்று கிளம்பி விடுகிறார். திடீரென கிராமத்துக்கு விசிட் அடிப்பது, குழந்தைகளை கொஞ்சுவது, முதியவர்களை கட்டிப்பிடிப்பது என்று மக்களுக்கு நெருக்கமாகிறார். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டுக்கு சென்ற முதல் நட்சத்திரம் அவர் தான்.
விழுப்புரம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார். அதனை நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும் என்று கிராமத்து மக்கள் வற்புறுத்தவே தைலாபுரத்துக்கு கிளம்பி போனார் ஜிவிபி. நிகழ்ச்சி நடந்த அன்று அந்த ஊர் கிராமத்து மக்களின் அன்பில் நெகிழ்ந்தே போய்விட்டார் ஜிவி. தைலாபுரத்து மக்களே விருந்து கொடுக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஒருவர் வலுகட்டாயமாக அழைத்து செல்ல, அவரின் இல்லத்திற்கு சென்று தரையில் அமர்ந்து சாப்பிட்டார். மதிய உணவை முடித்துக் கொண்டு கிராமத்தின் அருகில் இன்னொரு அரசு பள்ளிக்கு சென்று, குழந்தைகள் ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.