ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தானகவே சினிமா கற்றுக்கொண்டு 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் நம்பிக்கை தரும் ஒரு இயக்குனராக தன்னை அடையாளப்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அந்தப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான நரகாசுரனை இயக்குகிறார் நரேன். இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் மற்றும் மலையாள நடிகரும் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்-16ஆம் தேதி முதல் துவங்குகிறது.
இந்திரஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திரஜித்துக்கு போலீஸ் வேடம் ஒன்றும் புதிதல்ல. பத்துக்கும் மேற்பட்ட படங்களில் போலீஸாக நடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திலேயே மலையாளத்தில் வெளியான 'காடு பூக்குன்ன நேரம் மற்றும் வேட்ட என இரண்டு படங்களில் போலீஸாக நடித்தவருக்கு இப்போது கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்திலும் போலீஸ் கேரக்டர் கிடைத்துள்ளது. இதற்கு முன் தனது 'துருவங்கள் பதினாறு' படத்தில் கூட மலையாள நடிகர் ரகுமானை போலீஸ் கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் கார்த்திக் நரேன் என்பதும் இங்கே குறிப்பிடத்தகது.