ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகப் பெரும் பெயரையும், புகழையும் பெற்றார் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரவ் மீது அவருக்கு பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போதே காதல் மலர்ந்தது. அந்தக் காதலை அவர் வெளிப்படையாக ஆரவ்விடம் சொன்னார்.
முதலில் காதலிக்க ஆரம்பித்த ஆரவ், ஒரு கட்டத்தில் ஓவியாவிடம் இருந்து விலகினார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஓவியா தொடர்ந்து தூங்காமல் கூட தவித்தார். அதன் பின் மனநல மருத்துவர் ஆலோசனைப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகி சொந்த ஊருக்குச் சென்றார்.
அதன் பின் சில நாட்கள் கழித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் உண்மையான காதல் என்றும் தோற்காது என்று கூறியிருந்தார். நேற்று மாலை திடீரென ஓவியா டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டார். அதில், 'உறவு நிலை - தனியாக, திருப்திகரமாக' என்று பதிவிட்டிருந்தார். இதனால், ஆரவ் மீதான அவரது காதலை மறந்துவிட்டு பழைய நிலைக்கு ஓவியா திரும்பிவிட்டதாகவே தெரிகிறது.
இது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. பலரும் டுவிட்டரில் கமெண்ட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த கமெண்ட்டுகள் மட்டுமே 7400ஐத் தாண்டியிருக்கிறது. 14 ஆயிரம் பேர் அந்த டுவீட்டை ரிடுவீட் செய்தும், 51 ஆயிரம் பேர் அதை லைக் செய்தும் மீண்டும் ஓவியா மீதான அவர்களது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.