ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதிய படம் ஒன்றின் சூட்டிங்கின் போது எருமை மாட்டில் வலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான் கீழே விழுந்தார் இதில் அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் லொள்ளு தாதா பராக் பராக் என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் சென்னை அருகேயுள்ள போளூரில் உள்ள ஏரி அருகே நடந்தது.
மன்சூர் அலிகான் எருமை மாடு மீது ஊர்வலம் வருவது போன்ற காட்சியை படமாக்கினர். அப்போது சூட்டிங்கை பார்க்க ஏராளமான பேர் அங்கு கூடியிருந்தனர். கூட்டத்தை பார்த்து மிரண்டு எருமை மாடு ஓடியது. இதனால் எருமை மாடு மீது அமர்ந்திருந்த மன்சூர் அலிகான் கீழே விழுந்தார். இதில் அவருடைய வலது கையில் அடிபட்டது. இதனையடுத்து அருகிலிருந்த மருத்துவமனையில் மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறினர். இதனையடுத்து கையில் கட்டு போட்ட மருத்துவர்கள், சில நாட்கள் மன்சூரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் லொள்ளு தாதா பராக் பராக் படத்தின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது.