ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள முன்னணி நடிகர் திலீப், கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு நடந்து வருகிறது. 3 முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதனால் திலீப் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளிவரும் சூழ்நிலை இல்லாததால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை சிறையில் சந்தித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு திலீபின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன், திலீபின் மகள் மீனாட்சி ஆகியோர் திலீப்பை சிறையில் சந்தித்து பேசி விட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடிகர் ஜெயராம் ஆலுவா சிறைக்கு வந்தார். அவர் மனு எழுதிக் கொடுத்து திலீபை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.
இதுகுறித்து ஜெயராம் கூறியதாவது: திலீப் எனது நெருங்கிய நண்பர். ஒவ்வொரு ஓணம் பண்டிகையின்போதும் அவரை சந்தித்து அவருக்கு புத்தாடை பரிசளிப்பது எனது வழக்கம். இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் அவரை சந்தித்து புத்தாடை பரிசளித்து வந்திருக்கிறேன். வழக்கு பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. கடவுள் அருளால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் அவர் மீண்டு வருவார். அவருக்காக பிரார்த்திக்கிறேன் என்றார் ஜெயராம்.