ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீட் தேர்வினை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா, அதையடுத்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு மாணவர் போராட்டங்களும் வெடித்தன. நீட் தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதோடு, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அனிதாவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்தநிலையில், நயன்தாரா நடித்துள்ள அறம் படத்தின் போஸ்டரில் மாணவி அனிதா இறப்பு குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதில், அரசு அறம் காக்க தவறுவதால் இன்னும் எத்தனை அனிதாக்கள் உயிர் நீக்கப்போகிறார்களோ? என்று அச்சிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைராகியுள்ளது.