ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரஜினி நடித்து வரும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் உட்பட பல பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறாதநிலையில், நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.
வேலைநிறுத்தம் தொடர்வதால் தன்னுடைய பட பணிகள் பாதிக்கப்படுவதால் வெறுத்துப்போன இயக்குநர் விக்னேஷ்சிவன் திரைத்துறையினருக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
"ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, ஒருவரை பற்றி ஒருவர் புகார் சொல்வதை விட, ஒரு அறையில் உட்கார்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுங்கள். குடும்பத்துக்குள் இந்த எதிர்மறை விஷயங்களை நிறுத்துங்கள். தயவு செய்து இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கப் பாருங்கள்." என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பொங்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
சூர்யா பல காட்சிகளை ரீ-ஷூட் செய்யும்படி சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாட்டில் இறங்கியபோதுதான் பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு வெளியானது. அதனால் செம அப்செட்டில் இருக்கிறாராம் இயக்குநர் விக்னேஷ் சிவன்.