ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் மதுரை செல்வம் தயாரித்துள்ள படம் சீனி. இதில் ஓவியா, புதுமுகம் சஞ்சீவ், ராதராரவி, ரவிமரியா, செந்தில், வையாபுரி, கஞ்சா கருப்பு, சரவணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜதுரை இயக்கி உள்ளார். படம் பற்றி தயாரிப்பாளர் மதுரை செல்வம் கூறியதாவது:
மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வருகிறேன். பல ஆண்டுகள் கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் மானேஜராக இருக்கிறேன். சினிமா தயாரிப்பு தான் என் நீண்ட நாள் கனவு. ஆனால் கவுண்டமணியும், செந்திலும் என்னை தடுத்து வந்தார்கள். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றார்கள். நான் அவர்கள் பேச்சையும் மீறி இருக்கி சொத்தையெல்லாம் விற்று சீனி படத்தை எடுத்தேன்.
12 வருடங்களுக்கு முன்பு சிம்ரன் நடித்த ஐ லவ் யூடா படத்தை இயக்கிய ராஜதுரை என்பவர் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார். அவரை அழைத்து வந்து சீனி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தேன். ஓவியா எனக்கு பிடித்த நடிகை அவரை நடிக்க கேட்டேன். புதுமுகம் சஞ்சீவ் என்பவர் ஜோடியாக நடிக்க வேண்டும். இதனால் அவர் தயங்கினார். நான் எனது நிலையை எடுத்து சொன்னதும் நடிக்க ஒப்புக் கொண்டார்.
பல மாதங்களுக்கு முன்பே படம் முடிந்து விட்டது. இயக்குனர் ராஜதுரைக்கு 5 லட்சம் சம்பளம் பேசி கூடுதலாக 40 ஆயிரம் சேர்த்து கொடுத்து செட்டில் பண்ணினேன். ஆனால் அவர் 7 லட்சம் சம்பளம் கேட்டு படத்துக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். படத்தை வாங்க யாராவது முன்வந்தால் தான் இயக்கிய படத்தைப்பற்றி அவரே தவறாக சொல்லி வியாபரத்தை கெடுத்தார்.
இந்த நேரத்தில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி வந்தது. என் படத்தில் பணியாற்றிய ஓவியா, வையாபுரி, சினேகன், கஞ்சா கருப்பு 4 பேரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது படத்துக்கு பெரிய பலமாக இருந்தது. இதனால் படத்தின் பெயரை ஓவியாவ விட்டா யாரு என்று மாற்றினேன். இப்போது படத்தை கேட்டு நிறைய பேர் வருகிறார்கள். வருகிற செப்டம்பர் 29ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.
ஒரு நாள் ஓவியா போன் செய்து "அண்ணா நான் வெளிநாட்டில் இருக்கிறேன். படம் வெளிவரும்போது நான் வந்து படத்தை புரமோட் பண்ணித்தருகிறேன். உங்கள் நிலமை எனக்குத் தெரியும். என்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன்" என்றார். நான் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் எனக்கு துரோகம் செய்தாலும் ஓவியா என் பக்கம் நிற்பது எனக்கு புதிய துணிச்சலை கொடுத்திருக்கிறது. என்றார் மதுரை செல்வம்.