விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
முன்னணி மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில் வாக்குமூலத்தின் அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டார். தற்போது பல்சர் சுனில் நடிகை கடத்தலில் திலீபின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறி வருகிறார். இந்த நிலையில் காவ்யா மாதவன் சிறையில் இருக்கும் கணவர் திலீப்பை சந்தித்து பேசினார்.
நேற்று முன்தினம் கொச்சி சிறையில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது காவ்யாவின் தந்தை மாதவன், திலீப்பின் மகள் மீனாட்சி. திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான நாதிர்ஷா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது. இருவரும் முதல் 5 நிமிடங்கள் எதுவும் பேசிக் கொள்ளாமல் அழுதபடியே இருந்ததாவும், மகள் மீனாட்சியை கட்டிப்பிடித்து திலீப் கதறியதாகவும் பின்னர் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திலீப்பை சந்திக்க காவ்யா வந்த தகவல் கிடைத்து மீடியாக்கள் சிறை வாசலில் குவிந்தனர். ஆனால் காவ்யா மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வேகவேகமாக காரில் ஏறிச் சென்று விட்டார். இதற்கிடையில் தன் தந்தையின் நினைவு தின பிரார்த்தனையில் பங்கேற்க ஒரு நாள் அனுமதி தர வேண்டும் என்ற திலீப், அங்கமாலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் பிரார்த்தனையில் பங்கேற்க 2 மணி நேரம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.