ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது டூயட் பாடி விட வேண்டும் என்ற ஜெயம்ரவியின் கனவு தனிஒருவன் படத்தில் நனவானது. அதையடுத்து இப்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நனவாகியிருக்கிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் தான் நடித்த அனுபவத்தை தனது நட்பு வட்டாரங்களில் பக்கம் பக்கமாக பேசி வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால் நயன்தாராவோ, எத்தனை பக்க டயலாக்கை கொடுத்தாலும் அதை பத்தே நிமிடத்தில் மனப்பாடம் செய்து கொண்டு நடித்து விடுகிறார் சிவகார்த்திகேயன் என்று அவரைப்பற்றி பெருமையாக ஒரு தொலைக் காட்சி பேட்டியில் தெரிவித்தார். மேலும், சிவகார்த்திகேயன், ரொம்ப கலகலப்பான நடிகர். அவர் ஸ்பாட்டில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலைப்பளுவும் தெரியாது. அந்த அளவுக்கு நடிப்புக்கு நடுவே அவ்வப்போது காமெடி செய்து கொண்டேயிருப்பார் என்கிறார் நயன்தாரா.