ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரைப்படங்களை வாங்கி வெளிநாட்டில் திரையிடும் விநியோகஸ்தர்கள், தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர்கள் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பின் தலைவராக நடிகரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அருண் பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2019ம் ஆண்டு வரை அவர் இந்த பதவியை வகிப்பார்.
சங்கத்தின் செயலாளராக கன்ஷியாம் ஹேம் தேவும், ஆலோசனைக் குழு தலைவராக ஆனந்தா சுரேசும், துணை தலைவராக சஞ்சய் வாத்வாவும், துணை செயலாளராக கல்யாண சுந்தரமும், பொருளாளராக மொஹமத் யாஹியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர பூபதி சுப்பிரமணியம், அய்யப்பசாமி, அயூப்கான், மலேசியா பாண்டியன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.