ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை விவகாரம் பாலிவுட் வரை தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை கூறினார். அதுகூட அவராக வேண்டுமென்றே முன் வந்து கூறவில்லை. அவருடைய வாழ்க்கை பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு திலீப் விவாகரத்தை குறிப்பிட்டு பதிலளித்தார்.
நடிகை கங்கனாவுக்கும் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்குமான கீரி-பாம்பு சண்டை ஊரறிந்த ஒன்று. இருவரும் நெருங்கி பழகி வந்ததுடன், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் ஒருமுறை கங்கனா தெரிவிக்க, அப்படியெல்லாம் எங்களுக்குள் எதுவுமில்லை என ஹ்ரித்திக் ஒரே போடாக போட அப்போது முதல் இருவரும் எதிர் துருவங்களாக மாறிவிட்டனர்.
அந்த பேட்டியின்போது திலீப் விவாகரத்தை சுட்டிக்காட்டிய தொகுப்பாளர் உங்களுக்கு ஹ்ரித்திக்கிடம் இருந்து இப்படி ஏதும் அச்சுறுத்தல்கள் வரவில்லையா என்றார்..? அப்படி எதுவும் இல்லை என மறுத்த கங்கனா ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு பயம் தருகின்றன என்றும் குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மலையாள நடிகை விஷயத்தில் நடிகர் திலீப் வேறொரு நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததை நடிகரின் மனைவியிடம் இவர் சொல்லிவிட்டார் என்பதால் அவரை பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கும் எல்லைவரை நடிகர் திலீப் சென்றுள்ளார். திருமணம் மீறிய பந்தம் தொடரும் பட்சத்தில் அங்கே இப்படி சில மோசமான நிகழ்வுகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது” எனவும் கூறியுள்ளார் கங்கனா..