ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை மோனிகாவிற்கு இந்தாண்டு பொங்கல் ரொம்பவே சிறப்பானது. ஆம்! மலேசியா போயிருந்த அவர், அங்குள்ள தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார். மலேசியாவில் உள்ள பிரபல டி.வி., சானல் ஒன்று தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மலேசிய தமிழர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நடிகை மோனிகாவும் கலந்து கொண்டார். பொங்கல் விழாவையொட்டி அங்குள்ள கோயில் ஒன்றில் பொங்கல் பானை வைத்து அதில் தானியங்களை படையலிட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. நடிகை மோனிகா பானையில் அரிசியை கொட்டி, அடுப்பிற்கு தீ மூட்டி பொங்கல் வைத்தார். பொங்கல் பொங்கி வந்த போது விழாவில் கலந்து கொண்ட தமிழர்கள், பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு பொங்கி வந்த பொங்கலை கடவுளுக்கு படையலிட்டு வணங்கினர்.
அதனைத்தொடர்ந்து ஆட்டம், பாட்டு என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் மோனிகாவும் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் மோனிகாவுடன் சின்னத்திரை நாயகன் முரளியும் கலந்து கொண்டு விழாவை தொகுத்து வழங்கினார்.