ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரசியலில் ஈடுபடுவது பற்றி இடதுசாரி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன் என கமல்ஹாசன் கூறினார். மேலும் மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
கேரள சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். முதல்வர் இல்லத்தில் கமலுக்கு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது. முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்....
இடதுசாரி தலைவர்களிடம் ஆலோசனை
அரசியலில் ஈடுபடுவது பற்றி பினராயி விஜயனிடம் சில ஆலோசனை கேட்டேன். மேலும் சில இடதுசாரி தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற உள்ளேன். பினராயி விஜயன் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல, அவர் பணிகள் எப்படி சிறப்பாக உள்ளது என்பதே முக்கியம். இடதுசாரி தலைவர்கள் பெரும்பாலானவரை நான் ஹீரோவாக நினைக்கிறேன். கட்சி தொடங்குவது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன். நான் எந்த கட்சி பக்கமும் சாயவில்லை.
அனிதா தற்கொலை வேதனை
அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது. ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். கனவுடன் வாழ வேண்டிய பெண்ணை கண்மூட வைத்துவிட்டோம். அவரும் எனக்கும் பெண் தான். அவருக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இன்றைக்கு வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள்.
அனைவரும் போராட வேண்டும்
ஜாதி, மதம், மாநிலம் கடந்து அவருக்கு நியாயம் கிடைக்க போராட வேண்டும். நீட்டுக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்று கருதவில்லை. நல்ல செய்தி வருகிறது என்று கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றவர்களும் போராட முன் வர வேண்டும். தமிழக அரசியலை படமாக எடுத்தால் முடிவு சோகமாகவும், காமெடியாகவும் இருக்கும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.