ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு. உலகில் சிறந்த பாடி பில்லடர். மிஸ்டர் வோர்ல்டாக தேர்வு பெற்று நடிகர் ஆனார். ஹெர்குலிஸ் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு கேனன் தி பார்பேரியன், டெர்மினேட்டர் பட வரிசைகள், பிரடியேட்டர், ராவ் டீல், ட்ரூ லைஸ், கமாண்டோ, எக்ஸ்பெண்டபிள் வரிசை படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சினிமா செல்வாக்கின் காரணமாக தான் வாழ்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாக மாநிலத்தின் கவர்னர் ஆனார். அப்போது அவர் அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றை திறந்து வைத்தார். அந்த ஓட்டலின் முன் அர்னால்டின் ஆள் உயர சிலையை வைத்து கவுரவப்படுத்தியது ஓட்டல் நிர்வாகம். அதோடு அர்னால்டு எப்போது வேண்டுமானலும் வந்து இலவசமாக இந்த ஓட்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
அதன்பிறகு அர்னால்டின் கலிபோர்னியா கவர்னர் பதவி காலம் முடிந்தது. சினிமாவிலும் மார்க்கெட் போனது. சாதாரண குடிமகன் ஆனார். இந்த நிலையில் ஒரு நாள் அந்த ஓட்டலுக்கு சென்று ரூம் கேட்டிருக்கிறார் அர்னால்ட். "ரூம் அனைத்தும் புக் ஆகிவிட்டது. வேறு ஓட்டல் பாருங்கள்" என்று கூறியிருக்கிறது நிர்வாம். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அர்னால்ட். அந்த ஓட்டலின் முன் இருந்த தனது சிலையின் கீழேயே படுத்துக் கொண்டு அதை ஒரு போட்டோ எடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டு இப்படி எழுதியிருக்கிறார்.
நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்" எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம், நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும். எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது. உங்கள் புகழை, உங்கள் பதவியை, உங்கள் அதிகாரத்தை, உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்"
அர்னால்டின் இந்த மெசேஜும், அவரது செய்தியும் உலகம் முழுவதும் வைரலாக பரவியது. ஆனால் அர்னால்டின் படம் உண்மைதான். அர்னால்ட் சிலை இருக்கும் ஓஹையா பகுயிதில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டு நடித்த அர்னால்ட் படப்பிடிப்பு இடைவெளியில் அந்த சிலைமுன் கண்யர்ந்திருக்கிறார். இதை ஒருவர் படம் எடுத்து அர்னாலிடம் காட்டியிருக்கிறார். அதை அர்னால்ட் சும்மா ஜாலிக்காக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காலம் மாறிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுதான் இப்படி காட்டுத் தீயாக பரவி விட்டது.