ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆரவாரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பற்றி, கோடம்பாக்கத்தில் இப்போது அவ்வளவாக பேச்சே இல்லை. சூர்யாவுடன் தானாக சேர்ந்த கூட்டம், துல்கர் சல்மானுடன் மகாநதி ஆகிய படங்களில் மட்டுமே, தற்போது அவர் நடித்து வருகிறார்.
'தமிழ் சினிமாவில் புதுமுக நடிகையரின் படையெடுப்பு அதிகமாகி விட்டதால், கீர்த்தியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் தான், அவருக்கு கிராக்கி குறைந்து விட்டது' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால், கீர்த்தி தரப்போ, 'மேடம், இப்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 'மகாநதி படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராவதால், அதற்கு அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டியுள்ளது. அதனால், தற்போது வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல், தயக்கம் காட்டி வருகிறார்' என்கிறது.