ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விவேகம் படம் கடந்த வாரம் வெளிவந்ததால் சில முக்கியப் படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இருந்தாலும் அஜித் வந்தால் என்ன யார் வந்தால் என்ன என்று விவேகம் படம் வெளியான அன்று தப்பாட்டம் படமும், அதற்கு மறுநாள் அட்ரா ராஜா அடிடா, பணம் பதினொன்னும் செய்யும் ஆகிய படங்கள் வெளிவந்தன.
நாளை செப்டம்பர் 1ம் தேதி மாயவன், ஒரு கனவு போல, குரங்கு பொம்மை, புரியாத புதிர் ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் மாயவன் படம் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டது. அதனால், நாளை மற்ற மூன்று படங்கள்தான் வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களுமே அறிமுக இயக்குனர்களின் படங்கள்.
குரங்கு பொம்மை படத்தை நித்திலன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மற்ற படங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நேற்றே இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியைத் திரையிட்டு பாராட்டுக்களையும் வாங்கிவிட்டார்கள். இப்படம் தமிழ் சினிமாவின் இந்த ஆண்டின் முக்கியமான படமாக இடம் பிடிக்கும்.
ஒரு கனவு போல படத்தை விஜய்சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே வெளியிடுவதாக அறிவித்தார்கள். கடைசி நேரத்தில் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள். சௌந்தரராஜா, ராமகிருஷ்ணன், அமலா ரோஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இரண்டு நண்பர்களுக்கிடையிலான நெருக்கமான நட்புதான் இந்தப் படம்.
புரியாத புதிர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட மெல்லிசை படம் இது. ரஞ்சித் ஜெயக் கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எப்போதோ ஆரம்பிக்கப்பட்டு, எப்போதோ வெளிவந்திருக்க வேண்டிய படம். இப்படத்தின் டிரைலர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சில எதிர்பார்க்கப்படும் படங்கள் கூட சரியாக படத்தை வெளியிடாதவர்களிடம் போய் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாகிவிடுகிறது. அதையெல்லாம் மீறி இந்தப் படம் வெற்றி பெற்றால் அது விஜய்சேதுபதியின் ராசி.
பெரிய விளம்பரம் இல்லாமல், பரபரப்பு இல்லாமல் தங்களுடைய கதைகளை மட்டுமே நம்பி மூன்று அறிமுக இயக்குனர்களான நித்திலன், விஜய்சங்கர், ரஞ்சித் ஜெயக்கொடி களம் இறங்கியுள்ளார்கள்.