ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2008ல் பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த பழனி படத்தில் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை காஜல்அகர்வால். அதையடுத்து அவர் நடித்த சரோஜா படம் அவரை பேச வைத்தது. பின்னர் தமிழில் அதிக கவனம் செலுத்திய அவர் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாகி விட்டார். அதிலும் தற்போது ஒரே நேரத்தில் அஜீத், விஜய்யுடன நடித்தது அவரது மார்க்கெட்டை இன்னும் உயர்த்தி விட்டுள்ளது.
மேலும், தமிழ் சினிமாவுக்கு வந்து 9 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்றபோதும், இன்னும் காஜல்அகர்வாலுக்கு தமிழில் பேச தெரியாது. கேடி படத்தில் வந்த தமன்னா சரளமாக தமிழ் பேசும்போது காஜல்அகர்வால் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். ஆனால், துப்பாக்கி, ஜில்லா படங்களில் விஜய்யுடன் நடித்தபோது ஆங்கிலத்திலேயே பேசியவர், மெர்சல் படத்தில் நடித்தபோது தமிழில் பேசியிருக்கிறார்.
அதற்கு காரணம், இந்த படத்தில் என்னுடன் நடித்து முடிக்கிற வரை தமிழில்தான் பேச வேண்டும் என்று விஜய் கண்டிசன் போட்டிருந்தாராம். அதனால் தனக்கு தெரிந்த தமிழில் முடிந்தவரை பேசியிருக்கிறார் காஜல்அகர்வால். அப்படி மெர்சல் படப்பிடிப்பில் தமிழில் ஓரளவு பேசத் தொடங்கிய காஜல்அகர்வால், விவேகம் படப்பிடிப்பிலும் தமிழில் பேசிவந்தாராம். அதையடுத்து, இன்னும் சில படங்களில் நடித்து முடிப்பதற்குள் சரளமாக தமிழில் பேசி அசத்துவேன் பாருங்கள் என்று நட்பு நடிகர்களிடம் அடித்து சொல்கிறாராம் காஜல்அகர்வால்.