ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோவை : அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை என நடிகர் கமல் கூறி உள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: இது திருமண விழா அல்ல, ஆரம்ப விழா. . ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். இதனை இப்படியே விட்டு வைக்க கூடாது. தமிழக அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை. இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள் . இவ்வாறு நடிகர் கமல் தமிழகத்தின் அரசியல் சூழலை விமசர்சனம் செய்து பேசியுள்ளார்.
முன்னதாக தாம் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக டுவிட்டரில் கூறியிருந்தார் கமல். இன்று அவர் பேசுகையில், இது ஆரம்ப விழா என பேசியதன் மூலம் அரசியலில் குதிக்க கமல் ஆயத்தமாகிவிட்டதை போன்று இருந்தது.
அரசியலை டுவிட்டரில் துவங்கி விட்டேன்: கமல்
கோவை: அரசியலை டுவிட்டரில் துவங்கி விட்டேன் என நடிகர் கமல் கூறி உள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலை துவங்கியது துவங்கியது தான். அரசியல் பிரவேசத்தை டுவிட்டரில் துவங்கிவிட்டேன் . டுவிட்டரில் துவங்கினால் என்ன, கோவையில் துவங்கினால் என்ன என கூறினார்.டுவிட்டர் நாயகன் என்று அரசியல் கட்சியினர் விமர்சிப்பதை விமர்சனமாக பார்க்கிறேன். கோரிக்கையை வலியுறுத்திதொழிலாளர்கள் கோட்டைக்குசெல்வதை போன்று செல்வேன் .கோட்டைக்கு செல்வதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என கமல் கூறி உள்ளார்.