ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர். டுவிட்டர், பேஸ்புக்கில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர். ரிஷிகபூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தொடர்பாக ஜெய் ஹோ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் அப்ரோஸ் மாலிக் என்பவர் ரிஷிகபூரின் டுவிட்டரிலேயே புகார் ஒன்றை கூறியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூரின் டுவிட்டரை 26 லட்சம் மக்கள் பின் தொடர்கிறார்கள். ஆனால் அவர் எந்த சமூக பொறுப்பும் இல்லாமல் சிறுவர்களின் ஆபாச வீடியோவை அதில் வெளியிட்டுள்ளார். 26 லட்சம் பேரும் அந்த வீடியோவை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் நிச்சயம் சிறுவர்களும் இருந்திருப்பார்கள். எனவே பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போஸ்கோ) படி ரிஷி கபூர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெரிவித்திருந்தார்.
இதே புகாரை சைபர் க்ரைம் போலீசுக்கும் அனுப்பி இருந்தார். இந்த புகாரை ஏற்ற மும்பை பாந்த்ரா போலீசார் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.