ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா இருவருக்கும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்க இருக்கும் இந்தத் திருமணத்திற்கு இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம். தமிழ், தெலுங்குத் திரையுலகத்தினருக்கு அழைப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆனால், அதன் பின் நடக்க உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே திரையுலகத்தினரை அழைக்க உள்ளார்களாம். இது பற்றிய விவரத்தை நாகசைதன்யாவின் அப்பா நாகார்ஜுனாவே தெரிவித்துள்ளார். திரையுலகத்தில் சமந்தாவிற்கும், நாக சைதன்யாவிற்கும் பல நெருங்கிய நண்பர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு அழைப்பு இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இருந்தாலும் தனிப்பட்ட நிகழ்வாக அது நடக்க இருப்பதால் திரையுலகத்தில் உள்ளவர்கள் அது பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
நாகசைதன்யா - சமந்தா இருவரும் காதலர்களாக மாறுவதற்குக் காரணமாக இருந்த 'ஏ மாய சேசவே' படத்தின் இயக்குனர் கௌதம் மேனனையாவது அவர்கள் அழைப்பார்களா..?.