ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர்கள், நடிகைகள் என்றாலே அவர்கள் மீது ஒரு பிம்பம் விழுவது இயல்பு. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு வரை எளிமையாக இருப்பார்கள், நட்சத்திரமான பின் பழையனவற்றை மறந்து அவர்களாகவே ஒரு 'பந்தா'வைக் காட்டுவார்கள் எனப் பலரும் நினைப்பார்கள். அதிலும் பொது இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விஷயம் அப்பப்பா என்றிருக்கும் என்பார்கள். ஒரு சிலர் அதிலிருந்து விலகி மிகவும் எளிமையானவராக, சாதாரணமானவராக இருப்பார்கள்.
பொது இடங்களில் மக்களுடன் மக்களாக இருப்பதில் விருப்பமுள்ளவர் அஜித். தேர்தல் சமயத்தில் ஓட்டளிக்க வரும் போது மக்களுடன் மக்களாக நின்று அவர் ஓட்டளித்த புகைப்படம் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு விஷால் தங்கை திருமணத்தில் விஜய் வரிசையில் நின்று சென்றது வைரல் ஆகி வருகிறது. இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள் அவர்களை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.
அப்படி ஒரு விஷயத்தை மிகவும் இயல்பாகச் செய்திருக்கிறார் நடிகர் ஆர்யா. சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து அவருடைய வீட்டிற்கு சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அதைப் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். இன்று மீண்டும் அவருடைய வீட்டிலிருந்து விமான நிலையம் செல்வதற்கு மெட்ரோ ரயிலில் சென்றுள்ளார். அது மட்டுமல்ல மெட்ரோ ரயிலுக்கான பயண அட்டையையும் அவர் வாங்கியுள்ளார். இது பற்றி டுவிட்டரில் ,“விமான நிலையம் செல்ல டிராபிக் பற்றிய பிரச்சனை இல்லை, ஈஸியாகப் போக முடிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் டிராபிக்கைத் தவிர்க்க ரயில் பயணங்களை விட சிறந்த போக்குவரத்து எதுவுமில்லை என்பது சென்னை மக்களுக்கு விரைவில் புரிந்துவிடும்.