ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு, திரைத்துறைக்கு பயன்தரக்கூடிய பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறார். குறிப்பாக சினிமா உலகத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்துவரும் திருட்டு டிவிடி, தமிழ்ராக்கர்ஸ் போன்ற பைரஸி பிரச்சனையிலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுக்க போராடி வருகிறார்.
பல நேரங்களில் தானே நேரடியாகவே களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார் விஷால். பைரஸி பிரச்சனைக்கு உலகளவில் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில், கையெழுத்து வேட்டை ஒன்று தொடங்கியுள்ளனர். இதில் 1 லட்சம் கையெழுத்து கிடைத்தால் இந்த பைரசி பிரச்சனையை அமெரிக்க அதிபரின் மாளிகையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியுமாம்.
இந்த முயற்சி, பைரஸியை பிரச்சனையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தூண்டுகோலாக அமையுமாம். அமெரிக்காவிலிருந்து செயல்படுத்தப்படும் சட்டபூர்வமற்ற சர்வர்களை முடுக்கவதற்காகவே இந்த பெட்டிசன் தொடுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் இந்த பெட்டிசனுக்கு 1 லட்சம் கையெழுத்து கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் எல்லாவிதமான பைரஸி கன்டன்ட்களையும் நீக்குவதற்கு இதன் மூலம் வாய்ப்புள்ளதாம்.
இந்த தகவல்களை தயாரிப்பாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.