ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் விதியை ஃபாலோ பண்ண வேண்டும் என்று அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும், நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேயர்களுக்கும் மட்டும்தான் சொல்வார்கள் போலிருக்கிறது. நிகழ்ச்சியில் முகம் தெரியாமல் தான்தான் பிக் பாஸ் எனக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ், நிகழ்ச்சியில் வாரம் இறுதி நாட்களில் தொகுத்து வழங்க வரும் கமல்ஹாசன் ஆகியோருக்கு எந்த விதி முறையும் இல்லை போலிருக்கிறது.
கடந்த வாரம் சனிக் கிழமை வந்ததும், விதிகளை மதிக்காத போட்டியாளர்களுடன் பேச மாட்டேன் என்றார் கமல்ஹாசன். அதன்படியே சனிக் கிழமை பழைய போட்டியாளர்கள் யாருடனும் அவர் பேசவில்லை. அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை அவர் பேசியே ஆகவேண்டும். அப்போதுதான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுபவருடன் பேசிதான் அனுப்ப வேண்டும். அதனால், அன்று வேறு வழியில்லாமல் விதியை மீறுவதைக் கூட, யதார்த்தமாக அவர்கள் அப்படி நடந்தால் என்ன நாம் நம் வேலையைப் பார்ப்போம் என்று சமாதானம் செய்து கொண்டு, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்.
நேற்றைய ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் ரசிகர்களால் ஓட்டு போட்டு அனுப்பப்பட்டவர்களில், “ஆர்த்தி, ஜுலி, சக்தி, காயத்ரி” ஆகியோரை மட்டும் அழைத்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் யார் போகப் போகிறீர்கள் எனக் கேட்டார். சக்தி, காயத்ரி விருப்பமில்லை என்று கூற போக ஆசைப்படுகிறோம் என்று சொன்ன ஆர்த்தி, ஜுலி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று வந்த மற்றொரு போட்டியாளரான பரணி, இப்போது முடியாது அப்புறம் போகிறேன் என்று சொன்னார்.
ஆனால், குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய மற்ற போட்டியாளர்களான கஞ்சா கருப்பு, அனுயா, நமீதா ஆகியோரை நேற்று அழைக்கவில்லை. ஒருவேளை அவர்களை அழைத்தும் வரவில்லையா என்று தெரியவில்லை. ஓவியா ஏற்கெனவே வெளியிட்ட வீடியோவில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெளிவாகச் சொன்ன வீடியோவையே நேற்றைய நிகழ்ச்சியில் மீண்டும் காட்டினார்கள்.
இதனிடையே, சற்று முன்னர் வெளியிடப்பட்ட இன்றைய புரோமோ ஒன்றில் ஜுலி மீண்டும் அவருடைய வேலையை ஆரம்பித்துவிட்டார். இனி, அண்ணனா இருந்தாலும் தப்புனா நின்று கேட்பேன் என்று வழக்கம் போல நடிக்க ஆரம்பித்துவிட்டார். நேயர்களும் இனி 'பிக் பாஸ்'-ஐ திருத்தவே முடியாது என தாறுமாறாக கமெண்ட்டுகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் ஓவியாவைத் தவிர வேறு யார் திரும்ப வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அதைத் தெரிந்தும் பிக் பாஸ் ஜுலியை மீண்டும் அழைத்து வந்து அவருக்குண்டான வினையை அவரே தேடிக் கொள்கிறார். ஆப்பு அடுத்தவர்கள் வைப்பதுதான், ஆனால், பிக் பாஸ் இப்போது அவருக்கு அவரே வைத்துக் கொண்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் பறக்கிறது.