ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரைகளில் பல சீரியல்களில் நடித்து வந்தவர் சஞ்சீவ். திடீ ரென்று காணாமல் போன அவர் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த படங்கள் உடனடியாக தொடங்கப்படாததால் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மீண்டும் பிரவேசித்தார். தற்போது ஜீ சூப்பர் டேலண்ட்ஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுபற்றி சஞ்சீவ் கூறுகையில், நான் சினிமாவில்தான் நடிகராக அறிமுகமானேன். பல படங்களில் நடித்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி சினிமாவில் இடம் கிடைக்கவில்லை. அதனால்தான் சின்னத்திரைக்கு வந்தேன். இங்கு வந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி விட்டேன். தற்போதுகூட யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
அதற்காக நான் முழுநேர சீரியல் நடிகராக இருக்க விரும்பவில்லை. எனது நோக்கம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான். சமீபகாலமாக சிவகார்த்திகேயன், சந்தானம் மட்டுமின்றி சில சீரியல் நடிகர், நடிகைகள்கூட சின்னத்திரையில் இருந்து சென்று சினிமாவிலும் சாதித்து வருகிறார்கள். அதனால், கூடிய சீக்கிரமே ஒரு நல்ல படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி வெற்றி பெறுவேன் என்று கூறும் சஞ்சீவ், சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி, புதிய கீதை ஆகிய படங்களில் விஜய்யின் நண்பனாக நடித்திருக்கிறேன், அதோடு, விஜய் சினிமாவில் என்ட்ரியானபோது நானும் ஹீரோவாக நடிக்க முயற்சி எடுத்தேன். ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் சீரியல் நாயகனாகி விட்டேன் என்கிறார்.