ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கொல்கத்தா நகரில் உள்ள பிரமாண்ட பிரிட்ஜ், ஹவ்ரா பிரிட்ஜ். இந்த பிரிட்ஜில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறது ஹவ்ரா பிரிட்ஜ் என்ற படம். பிரபல கொல்கத்தா நடிகை பிரியங்கா உபேந்திரா தாயாகவும், ஐஸ்வர்யா அவரது மகளாகவும் நடிக்கிறார்கள்.
தமிழ், கன்னட மொழியில் தயாராகும் இந்தப் படத்தை எச்.லோஹித் இயக்குகிறார். எச்.சி.வேணு ஒளிப்பதிவு செய்கிறார். நோபின் பால் இசை அமைக்கிறார். இதன் தமிழ் வசனம் மற்றும் பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதுகிறார். ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
தரமணி படத்தை தயாரித்த பெருமையும் அதன் வெற்றியும் என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி, திரை உலகில் மேலும் தலை நிமிர்ந்து நடக்கச் செய்துள்ளது. வணிகரீதியான வெற்றி மட்டுமில்லாமல் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் அடையாளத்தை தந்துள்ளது தரமணி. ஹவ்ரா பிரிட்ஜ் எனது அடுத்த தயாரிப்பாகும். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் கதை இது. செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் இப்படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இக்கதையோட்டத்திற்கு கொல்கத்தா நகரம் மிக பொருத்தமான நகராக இருப்பதால் படப்பிடிப்பை அங்கு நடத்தவுள்ளோம். இப்படம் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் மதிப்பை கூட்டும் என உறுதியாக நம்புகிறேன். எங்களது புரியாத புதிர் படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. மேலும் பல தரமான படங்களை தர என் நிறுவனத்தின் சார்பில் முனைப்போடு உள்ளேன் என்றார் சதிஷ் குமார்.