பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் படடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் சுசீந்திரன். சின்ன பட்ஜெட்டில் படங்களை எடுத்தாலும், சுசீந்திரன் இயக்கும் படங்கள் ஏதாவது ஒருவகையில் பெரிய அளவில் பேசப்படும். விஷ்ணுவிஷாலை வைத்து இயக்கிய மாவீரன் கிட்டு படத்தை அடுத்து 'அறம் செய்து பழகு' என்ற படத்தை இயக்கினார்.
தற்போது இந்தப் படத்தின் பெயரை 'நெஞ்சில் துணிவிருந்தால்' என பெயர் மாற்றம் செய்துள்ளார். சந்தீப் கிஷன், மெஹ்ரீன் பிர்ஸதா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை 55 நாட்களில் முடித்துள்ளாராம் சுசீந்திரன். குறுகிய காலத்தில் படத்தை முடித்ததால் பட்ஜெட்டில் பல லட்சங்கள் மிச்சமானதாக மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் ஆண்டனி.
'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் விளம்பரங்களில் கதாநாயகிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. பல விளம்பரங்களில் கதாநாயகியின் முகத்தையே காணோம். இது பற்றி சுசீந்திரனிடம் கேட்டால், 'பொதுவாக என்னுடைய படங்களின் கதாநாயகிகளுக்கு கதையில் முக்கிய பங்கிருக்கும். ஆனால், 'நெஞ்சில் துணிவிருந்தால்'கதாநாயகி மெஹ்ரீனுக்கு கதையில் முக்கிய பங்களிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. படத்தின் கதாநாயகர்களான சந்தீப், விக்ராந்துடன் கதையை நகர்த்திச் செல்லுமளவுக்கான ஸ்கோப் கூட அவருடைய கேரக்டருக்கு இல்லை. அதனால்தான் விளம்பரங்களில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை!'' என்கிறார்.