ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் கமல்ஹாசன் உடன் 13 ஆண்டுகளாக லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்தவர் நடிகை கவுதமி. சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கமலை விட்டு பிரிந்தார். மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். தற்போது மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கவுதமி, நடிகர் கமலுடன் மீண்டும் இணைய இருப்பதாக ஒரு வீடியோ செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வீடியோ செய்தியை பார்த்துவிட்டு கோபமாக ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார் கவுதமி.
அதில், "முட்டாள்கள் பேசுகிறார்கள், நாய்கள் குரைக்கும். நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.