ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சிலவாரங்களுக்கு முன்பு ராணாவுடன் காஜல்அகர்வால் நடித்திருந்த நேனே ராஜூ நேனே மந்திரி என்ற தெலுங்கு படம் வெளியானது. அதையடுத்து நேற்று அஜீத்துடன் அவர் நடித்துள்ள விவேகம் படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து விஜய்யுடன் அவர் நடித்துள்ள மெர்சல் படமும் விரைவில் ரிலீஸ் ஆகிறது. ஆக, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள காஜல்அகர்கால் ஒன்றரை கோடியாக இருந்த தனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தி விட்டதாக சினிமா வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.
ஆனால் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார் காஜல்அகர்வால். சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே நானாக எனது சம்ப ளத்தை நிர்ணயித்ததில்லை. தயாரிப்பாளர்களாக என்ன கொடுக்கிறார் களோ அதைத்தான் வாங்கி வருகிறேன். அதோடு, அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நான் நினைத்ததுகூட இல்லை. இருப்பினும், எனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தி விட்டதாக யாரோ வதந்தி பரவியுள்ளது என்கிறார் காஜல்அகர்வால்.