ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
நயன்தாராவை வைத்து 'மாயா' படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் அஸ்வின் சரவணன். இவர் இப்போது எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா காபி முதலானோர் நடிக்க 'இரவாக்காலம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சென்னையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறுகிறது. தொடர்ந்து 42 நாட்கள் நடைபெறவிருக்கும் படப்பிடிப்புக்காக இயக்குநர் அஸ்வின் சரவணன், எஸ்.ஜே.சூர்யா உட்பட 'இரவாக்காலம்' படக்குழுவினர் ஊட்டி சென்றுள்ளனர்.
அங்கு இரவாக்காலம் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு அக்டோபர் 7-ஆம் தேதி படக்குழுவினர் சென்னை திரும்பவிருக்கிறனர். ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
'மாயா' படத்திற்கு இசை அமைத்த ரான் ஏதன் யோஹான் இசை அமைக்கிறார். மெர்சல் படத்தை அடுத்து 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்'நிறுவனத்தின் தயாரிப்பில் இரவாக்காலம் படம் வெளியாகிறது.