ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் தான் மெழுகு பொம்மை உருவத்துக்கு சொந்தக்காரரான இஷா தல்வார். ஆனால் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற மலையாள படமான 'தட்டத்தின் மறயத்து' மூலம் ரசிகர்களை கிறங்கடித்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவிற்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருந்தார். இத்தனைக்கும் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த படம் ஒன்றில் தான்..
இந்தநிலையில் சமீபத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ட்யூப்லைட் என்கிற படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகாட்டியிருந்தார் இஷா தல்வார். இருந்தாலும் அதை கணக்கில் சேர்க்க விரும்பாத இஷா தல்வார், தற்போது சயீப் அலிகானுடன் தான் நடித்துவரும் 'காலகாண்டி' என்கிற படத்தைத்தான் தனது முதல் பாலிவுட் படம் என கூறி வருகிறார். இந்தப்படத்தில் போட்டோகிராபர் வேடத்தில் நடித்து வருகிறார் இஷா தல்வார்.