ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசன் சமீப காலமாக அரசுக்கு எதிரான தனது கருத்து போராட்டத்தை இணையதளங்களின் வழியாக நடத்தி வருகிறார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சிலர் சும்மா கருத்து சொன்னால் போதாது களத்துக்கு இறங்கி வரவேண்டும் என்று விமர்சனமும் செய்கிறார்கள்.
இந்த நிலையில் விவசாயிகள் அமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிர்வாகிகளுடன் நேற்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது கமலின் கருத்து போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை அவர்கள் தெரிவித்தனர். அவர் நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அழைத்துள்ளனர். இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
கமல் அடிப்படையில் கிராமத்து மனிதர். விவசாயமும், தெரியும், விவசாயிகளின் நிலமையும் தெரியும். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறோம். அரசியல் பரபரப்புகளால் விவசாயிகளின் பிரச்சினை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்தும் அவருடன் விவாதித்தோம். விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவரது கருத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோம். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கிற பல தொலை நோக்கு திட்டங்களை அவர் வைத்துள்ளார். மரம் வளர்ப்பது, இயற்கை பாதுகாப்பது போன்ற பணிகளை இணைந்து செயல்படுத்த முடிவெடுத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.