ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரே ஒரு தனித்துவமான வெற்றிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நடிர்கர்களில் ஷாமும் ஒருவர். தன்னிடம் இருக்கும் திறமையை நிரூபிப்பதற்காக 6 என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்தார். கண்களை வீங்கச் செய்து நிஜமான பிச்சைக்காரனாக மாறி அதில் நடித்தார். படம் பெரிய அளவில் பேசப்பட்டதே தவிர வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதில் சில கோடிகளை இழந்தாலும் இன்னும் நம்பிக்கையோடு நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கும் பார்ட்டி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் தனக்கு நல்ல இடத்தை பெற்றுத் தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.
6 படத்தில் அவருக்கு தேசிய விருது சில வாக்குகள் வித்தியாத்தில் நழுவியது. இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: விருது கிடைக்காததில் வருத்தம் இல்லை. ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன், நல்ல படம் கொடுக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கைதான் வருத்தமளித்தது. 6 படத்தில் அதிக உழைப்பை போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்கொண்டேன்.
மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்? என்பதை படமாக்கியிருந்தோம். அந்த கருத்தும் பயமும் அவர்களைச் சென்றடைந்திருக்க வேண்டும். அது தியேட்டர் மூலமாக நடக்கவில்லை. ஆனால் ஜீ தமிழ் மூலம் மிக தாமதமாக சென்றடைந்தது. வெற்றி பெற்றவர்கள், தோல்வியானவர்கள் என்று படம் பார்க்காமல் நல்ல படமா பார்ப்போம் என்ற மன நிலை இருந்திருந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடியிருக்கும்.
இப்போது அந்த மன நிலை மக்கள் மத்தியில் வந்திருக்குன்னு நினைக்கிறேன். படம் வெற்றிபெறுவதும், அடுத்த நல்ல கதையில் நடிப்பதும்தான் உண்மையான விருது என்பது என் நம்பிக்கை. இன்னும் நிறைய படஙள் நடிக்கப்போகிறோம். காலங்கள் இருக்கு. கிடைக்காமலா போகும்? அதுதானே யதார்த்தம் விருது வழங்குபவர்களும் பெரிய படங்கள், சிறிய படங்கள் என்று பாராமல் முக்கியமான படங்கள் என்ன பேசியிருக்கிறது என பார்க்க வேண்டும் என்றார்.