ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அருள் நிதியாலும் அனைத்து விதமான பாத்திரங்களையும் ஏற்று நடிக்க முடியுமென அங்கீகாரம் தந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படமான மெளனகுரு வின் நாயகி இனியாவிடம் இப்பட இயக்குனர் சாந்தகுமார், மெளனகுரு படப்பிடிப்பில் இருந்த போது அப்படி என்ன வாக்குறுதி கொடுத்தாரோ? அப்படி எதை சாதித்துக் கொண்டாரோ தெரியவில்லை?! இப்பொழுது இனியாவின் செல்ஃபோன் நம்பரை பார்த்தாலே தன் ஃபோனை எடுப்பதே இல்லையாம்! இனியாவின் செல் நம்பரைத்தான் இயக்குனர் சாந்தகுமார் எடுப்பதில்லை... என்றில்லை... கேரள கோடு நம்பர் கொண்ட லேண்ட்லைன் ஃபோன் எண்களை பார்த்தாலும் கூட எடுப்பதில்லையாம். எல்லாம் இனியாவின் தாய்க்குலம் வாய்ப்பு கேட்டும், கொடுத்த வாக்குறுதி பற்றியும் கேட்டு அலப்பறை பண்ணும் பயம் தானாம்.
மெளனகுருவின் வெற்றீ அடுத்து பெரிய கம்பெனி ஒன்றிற்கு படம் பண்ண இருக்கும் சாந்தகுமாரின் இந்தப் படத்திலும் வாகைசூடி விட வேண்டும் என தவியாய் தவிக்கும் இனியாவின் பரிதவிப்பு ஏன் இயக்குனருக்கு புரிபடவே மாட்டேங்கிறது? என்பது தான் புரியாத புதிர்! இதவே மெளனகுரு மெளனமான வெற்றி பெற்றிருக்காவிட்டால் நிலைமை தலைகீழாக இருந்திருக்கும் சாந்தகுமாரின் தொலைபேசியை தொல்லைபேசியாக பார்த்திருப்பார்கள் இனியாவும் அவரது தாய்குலமும்! இதுதான் சினிமா!